நோயினையும் சாவினையும் முறியடிப்போம்

படிப்படியாக இறைமகன் இயேசுவின் இறைத்தன்மையை படம்படித்துக் காட்டுகிறார் நற்செய்தியாளர் தூய மாற்கு. இதன் உச்சமாக புயலை அடக்கியவர் (4: 35-41) பேயை ஓட்டியவர் (1:21-27) இன்றைய நற்செய்தியில் பிணியைப் போக்குகின்றார், இறந்தவரை உயிர்ப்பிக்கின்றார். இரண்டு அற்புதத்திற்கும் அடிப்படையாக இருப்பது “நம்பிக்கையோ”. நோயோ, இறப்போ, எதுவும் நம் ஆண்டவரின் இயேசுவின் மீது நம்பிக்கையோடிருந்தால் நம்மை அனுகாது, அனுகினாலும் அவர் அதனை வெற்றிக் கொள்வார். இதன் மூலம் அவர் மருத்துவர்கெல்லாம் மருத்துவராகவும், “என்னில் நம்பிகை கொள்பவன் இறப்பினும் வாழ்வான்” (யோவான் 11:26) என்ற இறைவார்த்தையும் நிறைவுப் பெறுகிறது. இன்றைய நற்செய்தியில் இருவருமே நம்மை ‘பயத்திலிருந்து நம்பிகையை’ நோக்கி அழைத்து செல்கின்றனர்.

இந்த இருவரைப் போலவே நாமும் இயேசுவின் “காலில் விழுவோம”; நம்பிகையோடும் உறுதியோடும்.
இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்” அன்போடும் பக்தியோடும்
இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்” எதிர்பார்ப்போடும் மகிழ்ச்சியோடும்
இந்த இருவரைப் போலவே இயேசுவின் “காலில் விழுவோம்” நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுத்து அர்பணிப்போம்.

திருத்தொண்டர். வளன் அரசு

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.