Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்)

அதிகாரம் 4

ஞானத்தினால் வரும் நன்மைகள்
1 பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்: மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.2 நான் உங்களுக்கு நற்போதனை அளிக்கின்றேன்: நான் கற்பிப்பதைப் புறக்கணியாதீர்கள்:3 நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.4 அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே: நான் சொல்வதை உன் நினைவில் வை: என் கட்டளைகளை மறவாதே: நீ வாழ்வடைவாய்.5 ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு: நான் சொல்வதை மறந்துவிடாதே: அதற்கு மாறாக நடவாதே:6 ஞானத்தை புறக்கணியாதே: அது உன்னைப் பாதுகாக்கும்: அதை அடைவதில் நாட்டங்கொள்: அது உன்னைக் காவல் செய்யும்.7 ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்: உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு.8 அதை உயர்வாய்க் கொள்: அது உன்னை உயர்த்தும்: அதை நீ தழுவிக்கொள்: அது உன்னை மாண்புறச் செய்யும்.9 அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்: மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும்.10 பிள்ளாய்! கவனி: நான் சொல்வதை ஏற்றுக்கொள்: அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.11 ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்: நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன்.12 நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது : நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய்.13 பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்: அதை விட்டுவிடாதே: அதைக் கவனமாய்க் காத்துக்கொள்: அதுவே உனக்கு உயிர்.14 பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே: தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.15 அதன் அருகில் செல்லாதே: அதில் கால்வைக்காதே: அதை விட்டு விலகி உன் வழியே செல்.16 தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் தூக்கம் வராது: யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது17 தீவினையே அவர்கள் உண்ணும் உணவு: கொடுஞ் செயலே அவர்கள் பருகும் பானம்.18 நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது: அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது.19 பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது: தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது20 பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு: நான் சொல்வதைக் கவனி.21 உன் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்: உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை. 22 அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்: அவர்களுக்கு உடல் நலமும் தரும்.23 விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்: ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.24 நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது: வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது.25 உன் கண்கள் நேரே பார்க்கட்டும்: எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து.26 நேர்மையான பாதையில் நட: அப்பொழுது, உன் போக்கு இடரற்றதாயிருக்கும்.27 வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே: தீமையின் பக்கமே காலெடுத்து வைக்காதே.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!