அபக்கூக்கு | ||
அதிகாரம் 2 |
||
அபக்கூக்குக்கு ஆண்டவரின் பதிலுரை 1 நான் காவல் மாடத்தில் நிற்பேன்; கோட்டைமேல் நின்று காவல் புரிவேன்; என் வாயிலாக ஆண்டவர் என்ன கூறப்போகின்றார் என்றும் என் முறையீட்டுக்கு என்ன விடையளிப்பார் என்றும் கண்டறிவதற்காகக் காத்திருப்பேன். 2 ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: "காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. 3 குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்: காலம் தாழ்த்தாது. ![]() ![]() எபி 10:38 நேர்மையற்றோருக்கு வரும் அழிவு 5 மேலும் செல்வம் ஏமாற்றிவிடும்; ஆணவக்காரர் நிலைத்து நிற்கமாட்டார்; அவர்களது பேராசை பாதாளத்தைப் போல் பரந்து விரிந்தது; சாவைப்போல் அவர்களும் போதும் என்று நிறைவு அடைவதில்லை; வேற்றினத்தார் யாவரையும் அவர்கள் தங்கள் பக்கம் சேர்த்துக் கொள்கின்றனர்; மக்களினங்கள் அனைத்தையும் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்கின்றனர். ![]() எபிரேய பாடம் 6 ஆனால் தோல்வியுற்ற அனைவரும் அவர்கள் மேல் பழிமொழிகளையும், ஏளனப் பாடல்களையும் இப்படிப் புனைவார்கள்: 'தமக்குரியது அல்லாததைக் தமக்கெனக் குவித்துக் கொள்கின்றவருக்கு ஐயோ கேடு! இன்னும் எத்துணைக் காலத்திற்கு இப்படிச் செய்வர்? அவர்கள் தங்கள்மேல் அடைமானங்களையே சுமத்திக் கொள்கின்றார்கள்!' 7 உமக்குக் கடன் கொடுத்தவர்கள் திடீரென எதிர்த்தெழ மாட்டார்களோ? உன்னைத் திகிலடையச் செய்கின்றவர்கள் விழித்தெழ மாட்டார்களோ? அப்பொழுது நீ அவர்களுக்குக் கொள்ளைப் பொருள் ஆவாய். 8 நீ பல நாட்டினரைச் சூறையாடினாய்; மனித இரக்கத்தைச் சிந்தினாய்; நாட்டுக்கும், நகர்களுக்கும் அங்குக் குடியிருப்போர் அனைவர்க்கும் கொடுமைகள் செய்தாய்; இவற்றிற்காக, மக்களினங்களுள் எஞ்சியோர் யாவரும் உன்னைச் சூறையாடுவர். 9 தீமையின் பளுவிலிருந்து தப்ப, தான் வாழுமிடத்தை மிக உயரத்தில் அமைக்க, தன் குடும்பத்திற்காக நேர்மையற்ற வழியில் பொருள் சேர்க்கிறவனுக்கு ஐயோ கேடு! 10 உன் திட்டங்களால் உன் குடும்பத்திற்கு மானக்கேட்டை நீ வருவித்தாய்; மக்களினங்கள் பலவற்றை அழித்தமையால், உன் அழிவை நீயே தேடிக்கொண்டாய். 11 சுவரிலிருக்கும் கற்களும் உனக்கு எதிராகக் கூக்குரலிடும்; கட்டடத்தின் உத்திரம் அதை எதிரொலிக்கும் 12 இரத்தப்பழியால் நகரைக் கட்டி எழுப்பி, அநீதியால் பட்டணத்தை நிலை நாட்டுகிறவனுக்கு ஐயோ கேடு! 13 மக்களினங்களின் உழைப்பு நெருப்புக்கு இரையாவதும், வேற்றினத்தாரின் களைப்பு வீணாகப் போவதும் படைகளின் ஆண்டவரது திருச்செயல் அன்றோ? 14 தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும். ![]() |
|