பேதுரு முதல் திருமுகம் (1 இராயப்பர்) | ||||
|
||||
அதிகாரம் 1 |
||||
1. முன்னுரை 1 போந்து, கலாத்தியா,
கப்பத்தோக்கியா, ஆசியா,
பித்தினியா ஆகிய நாடுகளில்
சிதறுண்டு, தற்காலிகக் குடிகளாய்
வாழ்ந்துவரும் உங்களுக்கு, இயேசு
கிறிஸ்துவின் திருத்தூதன் பேதுரு
எழுதுவது: 2 அருளும் அமைதியும்
உங்களிடம் பெருகுக! தந்தையாம்
கடவுளின் முன்னறிவின்படி, இயேசு
கிறிஸ்துவுக்குக்
கீழ்ப்படியவும், அவரது
இரத்தத்தால்
தூய்மையாக்கப்படவும் நீங்கள் தூய
ஆவியால் இறைமக்களாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.வாழ்த்து 2. கிறிஸ்தவ அழைப்பும் பொறுப்பும் 3 நம் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவின் கடவுளும்
தந்தையுமானவர் போற்றி! அவர் தம்
பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு
கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து
நமக்குப் புதுப்பிறப்பு
அளித்துள்ளார். இவ்வாறு குன்றா
எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம்.4 அழியாத, மாசற்ற, ஒழியாத
உரிமைப் பேறும் உங்களுக்கென
விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது.5 நீங்கள் கொண்டுள்ள
நம்பிக்கையின் வழியாய்
மீட்புக்காகக் கடவுளுடைய
வல்லமையால் பாதுகாக்கப்பட்டு
வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக்
காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய்
உள்ளது.6 இப்போது சிறிது காலம்
நீங்கள் பல்வகைச் சோதனைகளால்
துயருற வேண்டியிருப்பினும்,
அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள்.7 அழியக்கூடிய பொன்
நெருப்பினால் புடமிடப்படுகிறது.
அதைவிட விலையுயர்ந்த உங்கள்
நம்பிக்கையும்
மெய்ப்பிக்கப்படவே
துயருறுகிறீர்கள். இயேசு
கிறிஸ்து வெளிப்படும்போது
அந்நம்பிக்கை உங்களுக்குப்
புகழும் மாண்பும் பெருமையும்
தருவதாய் விளங்கும்.8 நீங்கள் அவரைப்
பார்த்ததில்லை: எனினும் அவர்மீது
அன்பு செலுத்துகிறீர்கள்.
இப்பொழுதும் நீங்கள் அவரைக்
கண்டதில்லை: எனினும் நம்பிக்கை
கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற
மகிழ்ச்சியடைந்து பேருவகை
கொள்கிறீர்கள்.9 இவ்வாறு உங்கள்
நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம
மீட்பையும் பெறுகிறீர்கள்.10 உங்களுக்கென்றிருந்த
அருளைப் பற்றிதான் இறைவாக்கினர்
இறைவாக்குரைத்தனர்: இந்த மீட்பைக்
குறித்துத் துருவித் துருவி
ஆய்ந்தனர்.11 தங்களுக்குள் இருந்த
கிறிஸ்துவின் ஆவி, கிறிஸ்து
படவேண்டிய துன்பங்களையும்
அவற்றுக்குப்பின் அடைய வேண்டிய
மாட்சியையும் முன்னறிவித்தபோது,
ஆவியால் குறிப்பிடப்பட்ட காலமும்
சூழ்நிலையும் எவையென்று
ஆராய்ந்தனர்.12 அவர்களது பணி தங்கள்
பொருட்டல்ல, உங்கள் பொருட்டே
என்பது அவர்களுக்கு
வெளிப்படுத்தப்பட்டது.
விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய
ஆவியால் உங்களுக்கு நற்செய்தி
அறிவித்தவர்கள், அவர்கள்
முன்னறிவித்தவற்றை இப்போது
உங்களுக்குத்
தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை
அறிந்து கொள்ள வானதூதர்களும் ஆவஉயிரூட்டும் எதிர்நோக்கு தூய வாழ்வுக்கான அழைப்பு 13 ஆகவே, உங்கள் மனம்
செயலாற்றத் தயாராயிருக்கட்டும்:
அறிவுத்
தெளிவுடையவர்களாயிருங்கள். இயேசு
கிறிஸ்து வெளிப்படும்பொழுது
உங்களுக்கு அளிக்கப்படும் அருளை
முழமையாக எதிர்நோக்கி இருங்கள்.14 முன்னர் அறியாமையில்
இருந்தபோது இச்சைகளுக்கிசைய
நடந்தது போலன்றி, கீழ்ப்படிதலுள்ள
மக்களாய் இருங்கள்.15 உங்களை அழைத்தவர்
தூய்மையுள்ளவராய் இருப்பதுபோல
நீங்களும் உங்கள்
நடத்தையிலெல்லாம்
தூய்மையுள்ளவர்களாய் இருங்கள்.16 நீங்கள் தூயவராயிருங்கள்.
ஏனெனில் நான் தூயவன் என மறைநூலில்
எழுதப்பட்டிருக்கிறது.17 நீங்கள் தந்தையே என
அழைத்து மன்றாடுபவர், ஆளைப்
பார்த்தல்ல, அவரவர் செயல்களின்
படியே தீர்ப்பு வழங்குகிறார்.
ஆகையால் இவ்வுலகில் நீங்கள்
அன்னியராய் வாழும் காலமெல்லாம்
அவருக்கு அஞ்சி வாழுங்கள்.18 உங்கள்
மூதாதையரிடமிருந்து வழிவழியாய்
வந்த வீணான நடத்தையினின்று உங்களை
விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை
என்னவென்று உங்களுக்குத்
தெரியும். அது பொன்னும்
வெள்ளியும் போன்று
அழிவுக்குட்பட்டது அல்ல:19 மாறாக, மாசு மறுவற்ற
ஆட்டுக் குட்டியைப் போன்ற
கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள
இரத்தமாகும்.20 உலகம் தோன்றுமுன்னரே
முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக்
கடைசிக் காலத்தில் உங்களுக்காக
வெளிப்படுத்தப்பட்டார்.21 அவர் வழியாகத்தான் நீங்கள்
கடவுள்மீது நம்பிக்கை
கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக்
கடவுள் உயிர்த்தெழச் செய்து
பெருமைப்படுத்தியுள்ளார். இதனால்
நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை
கொண்டு அவரை எதிர்நோக்கி இருக்கவே
இவ்வாறு செய்தார்.22 உண்மைக்குக்
கீழ்ப்படிந்து உங்கள் ஆன்மா
தூய்மை அடைந்துள்ளதால் நீங்கள்
வெளிவேடமற்ற முறையில் சகோதர அன்பு
காட்ட முடியும். எனவே நீங்கள், தூய
உள்ளத்தோடு ஒருவருக்கொருவர்
ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்.23 நீங்கள் அழியக்கூடிய
வித்தினால் அல்ல: மாறாக,
உயிருள்ளதும்,
நிலைத்திருப்பதுமான,
அழியாவித்தாகிய கடவுளின்
வார்த்தையால் புதுப்பிறப்பு
அடைந்துள்ளீர்கள்.24 ஏனெனில், மானிடர் அனைவரும்
புல்லைப் போன்றவர்: அவர்களது
மேன்மை வயல்வெளிப் பூவைப்
போன்றது: புல் உலர்ந்ததுபோம்: பூ
வதங்கி விழும்:25 நம் ஆண்டவரின் வார்த்தையோ
என்றென்றும் நிலைத்திருக்கும்.
இவ்வார்த்தையே உங்களுக்கு
அறிவிக்கப்பட்ட நற்செய்தி. |
![]() |
|