Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அதிகாரம் 70

உதவிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு; நினைவு கூர்தலுக்காகத் தாவீது பாடியது)
1 கடவுளே! என்னை விடுவித்தருளும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்!2 என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் வெட்கமும் குழப்பமும் அடைவராக! எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர் வெட்கத்தால் தலைகுனிந்து பின்னிட்டுத் திரும்புவராக!3 என்னைப் பார்த்து, 'ஆ! ஆ!' என்று ஏளனம் செய்வோர் பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவாராக!4 உம்மை நாடித் தேடும் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூர்வராக! நீர் அருளும் மீட்பில் நாட்டம் கொள்வோர் 'கடவுள் மாட்சி மிக்கவர்' என்று எப்போதும் சொல்வர்.5 நான் சிறுமையுற்றவன், ஏழை; கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்; நீரே எனக்குத் துணை; என்னை விடுவிப்பவர்; என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!