Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அதிகாரம் 87

பெருமைமிகு எருசலேம்
(கோராக்கியரின் புகழ்ப்பாடல்)
1 நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.2 யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.3 கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. (சேலா)4 எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, 'இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்' என்று கூறப்படும்.5 'இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.6 மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, 'இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார். (சேலா)7 ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து 'எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது' என்பர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!