Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

செக்கரியா

அதிகாரம் 10

விடுதலைக்கான ஆண்டவரின் வாக்குறுதி
1 இளவேனில் காலத்தில் மழைக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்: ஆண்டவரே மின்னல்களை உண்டாக்குபவர்: மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்: வயல்வெளிகளில் பயிரினங்களை முளைப்பிப்பவரும் அவரே:2 குலதெய்வங்கள் வீணானதையே கூறுகின்றன; குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்; அவர்கள் போலிக் கனவுகளை எடுத்துரைக்கின்றனர்; வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்; ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்; ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.3 ஆயர்களுக்கு எதிராக என் கோபம் பற்றியெரிகின்றது: தலைவர்களை நான் தண்டிக்கப் போகின்றேன்: ஏனெனில், படைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக் கண்காணிக்கிறார்: அவர்களை வலிமைமிகு போர்க்குதிரைகளைப்போல் ஆக்குவார்.4 அவர்களிடமிருந்தே மூலைக் கல் தோன்றும்: கூடார முளையும், போர் வில்லும், ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.5 அவர்கள், ஆற்றல்மிக்க போர்வீரர்களைப்போல், பகைவரைச் சேற்றில் தள்ளி மிதிப்பார்கள்.6 யூதா குடும்பத்தை ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்: யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்: அவர்கள்மீது இரக்கம் கொண்டுள்ளதால் அவர்களை நான் திரும்பி வரச்செய்வேன்: அவர்கள் என்னால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல் இருப்பார்கள்: ஏனெனில், நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்: நான் அவர்களின் மன்7 எப்ராயிம் மக்கள் ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்: திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல் அவர்கள் உள்ளம் களிப்படையும்: அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்: ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும்.8 சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்: ஏனெனில் நானே அவர்களை மீட்டருள்வேன்: முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள்.9 மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்: தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.10 நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்: அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்: கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவேன்: இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள்.11 எகிப்தியக் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள்: கடல் அலைகள் அடித்து நொறுக்கப்படும்: பேராற்றின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்: அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்: எகிப்து நாட்டின் செங்கோல் அகற்றப்படும்.12 ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்: ஆண்டவரின் பெயரில் அவர்கள் பெருமைகொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!